இதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவியர்களும் இச்சலுகை பொருந்தும். பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து இம்மாத இறுதிக்குள் பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க அலுவலர்கள் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கிச் செல்ல அனைத்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு சீருடையில் இருந்தால் மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.