லஹைனா பகுதியிலும் காட்டு தீ பரவியதால் வானுயர கரும்புகை எழுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர். உடனே அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவரகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டு தீயில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க கடலோர காவல்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. இந்த காட்டுத்தீயில் சிக்கி 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என மவுயி தீவு மேயர் ரிச்சர்ட் பைசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடந்த வருகிறது.
The post ஹவாய் காட்டு தீயில் சிக்கி 6 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.