இதன் தொடர்ச்சியாக ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கென ‘புதியன விரும்பு- 2023’ என்கிற கோடை முகாம் இன்று துவங்கியது. இந்த முகாமின் துவக்க விழா இன்று காலை 9 மணிக்கு நடந்தது. பள்ளிக் கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பறை இசைத்து ‘புதியன விரும்பு- 2023’ முகாமை துவக்கி வைத்து பேசினார்.
ஐந்து நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1040 அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
The post அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘புதியன விரும்பு- 2023’ முகாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.