ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. கடலூரில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினார். போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை தொடர்ந்து உயர்த்தி பிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சனாதனத்திற்கு ஆதரவாகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் அரசியல் கட்சியினர் கூறியுள்ளனர்.
The post ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சை பேச்சு.. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்; போகும் இடங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் appeared first on Dinakaran.