ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி: ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, “ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு முன்வைத்த கருத்துகள் வழக்கம் போலவே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி படிக்காதது வித்தையாக உள்ளது. பொய்யான தகவலை கூறி வரலாற்றை மாற்றி அமைக்க ஆளுநர் ரவி முயற்சிக்கிறார். மேலும் புதுச்சேரி அரசு அதிகாரிகளை பாஜகவுக்கு விளம்பரம் செய்ய ஆளுநர் தமிழிசை பயன்படுத்தி வருகிறார். அரசு பணத்தை வீணாக்கி பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கிறார் ஆளுநர் தமிழிசை என்று நாராயணசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

The post ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: