ஜி.கே.வாசன் அறிக்கை ஜூலை மாத காவிரி தண்ணீரை முழுமையாக பெற வேண்டும்

சென்னை: ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12 டி.எம்.சி ஆக குறைந்துள்ளது. எனவே, கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். அப்படி திறந்தால் தான் விவசாயிகள் தொடர்ந்து நடவு செய்து, குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும்.எனவே தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பெற வேண்டிய ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெற உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

The post ஜி.கே.வாசன் அறிக்கை ஜூலை மாத காவிரி தண்ணீரை முழுமையாக பெற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: