சிறுமிக்கு பாலியல் தொல்லை 72 வயது முதியவர் கைது

வளசரவாக்கம்: கோயம்பேட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ரகு (37, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 21ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எனது 6 வயது மகள், குளியல் அறைக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சங்கர் (72) என்பவர், எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இதுபற்றி, பெற்றோரிடம் சொல்ல கூடாது என்றும் மிரட்டிள்ளார். எனவே, சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சங்கரை தேடி வந்தனர். இதையறிந்த அவர், போலீசாருக்கு பயந்து வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார். இந்நிலையில், போலீசார் விசாரணையில், அம்பத்தூரில் உள்ள அவரது மகன் வீட்டில் சங்கர் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை போலீசார் சங்கரை பிடித்து, கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ், சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை 72 வயது முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: