குப்பைகளே இல்லாத இடத்தை கூட்டிய ஆளுநர்

ராமேஸ்வரம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மனைவி லட்சுமியுடன் சிறப்பு வழிபாடு செய்து தியானம் செய்தார். தொடர்ந்து கோயிலுக்கு வெளியே கிழக்கு ரத வீதியில் தூய்மை பணிகளை துவக்கி வைத்தார். கையுறைகளை மாட்டிக்கொண்டு புதிய துடைப்பத்துடன் கூட்டுவதற்காக குப்பையை தேடினார். அங்கு குப்பையே இல்லாததால் புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். ஆளுநர் வருகையையொட்டி தனுஷ்கோடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு காலை 11 மணி முதல் மதியம் வரை சுமார் மூன்று மணிநேரம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆளுநருக்கு கருப்புக்கொடி: முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம் அமைப்புகளை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post குப்பைகளே இல்லாத இடத்தை கூட்டிய ஆளுநர் appeared first on Dinakaran.

Related Stories: