காங்கிரசில் இருந்து விலகிய மராட்டிய முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் பாஜகவில் சேர்ந்தார்!

டெல்லி: காங்கிரசில் இருந்து விலகிய மராட்டிய முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் பாஜகவில் சேர்ந்தார். மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் முன்னிலையில் அசோக் சவான் பாஜகவில் சேர்ந்தார். 2008 டிசம்பரில் இருந்து 2010 நவம்பர் வரை மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக பதவி வகித்தவர் அசோக் சவான். பாஜக சார்பில் மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அசோக் சவான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post காங்கிரசில் இருந்து விலகிய மராட்டிய முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் பாஜகவில் சேர்ந்தார்! appeared first on Dinakaran.

Related Stories: