ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா எம்பி ராஜ்குமார் ரோட் மற்றும் கல்வி துறை அமைச்சர் மதன் திலாவர் ஆகியோருக்கும் இடையே கடந்த 22ம் தேதி கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது பேசிய எம்பி ராஜ்குமார் நான் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவன், இந்து மதம் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களில் இருந்து வேறுபட்ட நம்பிக்கை முறையை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார். இதற்கு அமைச்சர் திலாவர், பிஏபி தலைவர் தன்னை இந்துவாக கருதவில்லை என்றால், அவர் இந்துவின் மகனா என்பதை அறிந்து கொள்வதற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எம்பி ராஜ்குமார், அவரது ஆதரவாளர்கள் தங்களது ரத்த மாதிரிகளை கையில் எடுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் திலாவர் வீடு நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

The post ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: