பீகாரில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சியில் மக்கள்!!!

பாட்னா : பீகாரில் வெள்ளப்பெருக்கில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்து அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனமழையால் கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பீஜா காவல் நிலையம் அருகே 75 மீட்டர் உள்ள பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி செலவில் கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய இந்த பாலம் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

சுமார் 25 மீட்டர் நீளமுள்ள ஒரு தூண் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் அடித்து செல்லப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. பாலங்கள் இடிந்து விழுந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கடந்த 23ம் தேதி கிழக்கு சம்பாரண் மாவட்டம் கோரசஹான் பகுதியில் சிறிய பாலம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல், 22ம் தேதி சிவான் மாவட்டத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 18ம் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ. 12 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 180 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. கிஷன்கஞ்ச் மாவட்டம் பான்ஸ்பரி ஷ்ரவன் சௌக் அருகே மரியா ஆற்றின் குறிக்கே ஆற்றுப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

The post பீகாரில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சியில் மக்கள்!!! appeared first on Dinakaran.

Related Stories: