ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட சரியான விலை நிர்ணய வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் பேடிஎம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து அந்நிய நேரடி முதலீட்டை பெற்றிருப்பதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது. இதுதொடர்பாக, ஒன்கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ரூ.245 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள், லிட்டில் இன்டர்நெட் நிறுவனத்தின் ரூ.345 கோடி பரிவர்த்தனைகள், நியர்பை நிறுவனத்தின் ரூ.21 கோடி பரிவர்த்தனைகள் சந்தேக வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையின் நோட்டீசை தொடர்ந்து பங்குச்சந்தையில் பேடிஎம் பங்குகள் நேற்று ஆரம்பத்தில் சரிவை சந்தித்தாலும் மார்க்கெட் முடிவில் 2 சதவீத உயர்வை கண்டன.
The post அந்நிய செலாவணி விதிமீறல் பேடிஎம் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ரூ.611 கோடி பரிவர்த்தனையில் சந்தேகம் appeared first on Dinakaran.