பங்கு சந்தை குறித்து பீதியை உருவாக்க சர்வதேச எண்ணில் இருந்து போலி அழைப்புகள்

புதுடெல்லி: தொலைதொடர்பு துறை வெளியிட்டுள்ள சமூக ஊடக எச்சரிக்கையில்,‘‘சர்வதேச எண்களில் இருந்து வரும் போலி அழைப்புகளில் இந்திய பங்கு சந்தை குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை சரிவை சந்திக்க உள்ளதாகவும் மார்ச் 12ம் தேதிக்கு முன்னர் பங்குகளை விற்பனை செய்யும்படியும் அந்த அழைப்பின் பதிவு செய்யப்பட்ட செய்தியில் வலியுறுத்தப்படுகின்றது.

தேச விரோத சக்திகள் மூலமாக இந்த அழைப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தீங்கிழைக்கும் அழைப்புகளை தடுப்பதற்கு தொலை தொடர்பு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் புகாரளிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பங்கு சந்தை குறித்து பீதியை உருவாக்க சர்வதேச எண்ணில் இருந்து போலி அழைப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: