எனவே, இதனை தவிர்ப்பதற்காகவும், இது குறித்து எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இந்த முறையை மேம்படுத்துவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே இதுபோன்ற சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், அரசு முடிவு செய்து உள்ளது. அதனடிப்படையில் இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000-க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த எல்எல்ஆர் (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும், இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையை பெறுவதற்கு பொதுமக்கள் சேவை கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எலஎல்ஆர் -ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் (ஓட்டுநர் உரிமம், பர்மிட், உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
The post இ-சேவை மையங்கள் மூலம் எல்எல்ஆர் பெற விண்ணப்பம்: இன்று முதல் அமல் appeared first on Dinakaran.