இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தற்கொலை செய்த சகார்தர் 16-6-2022 முதல் கோவையில் பணிபுரிந்தார். விமான நிலையம் அருகில் உள்ள பூங்கா நகரில் வசித்தார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தால் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி appeared first on Dinakaran.