இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: புறநகர் ரயில் சேவைகள் நேற்று பிற்பகல் 2 மணி முதல் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 30 நிமிடதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல, சென்னை கடற்கரை – திருவள்ளூர் – அரக்கோணம் (பெரம்பூர் வழியாக) வழித்தடத்திற்கு 30 நிமிடதிற்கு ஒரு ரயிலும், திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்திற்கு 1 மணிநேரதிற்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை இடையே எம்ஆர்டிஎஸ் பிரிவில் 30 நிமிட இடைவெளியில் ஒரு ரயில் என நேற்று மாலை 3 மணி முதல் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்றும், நேற்று அட்டவணை படியே ரயில் சேவை இயங்கும்.
The post புயல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.