தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல்

டெல்லி : மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மார்ச் 1-ல் இருந்து மே 18 வரை நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் சிக்கிய பொருளில் 45 சதவீதம் போதைப் பொருள்கள் ஆகும். மார்ச் 1-ல் இருந்து மே 18 வரை நடந்த சோதனைகளில் குஜராத்தில் அதிகபட்சமாக ரூ.1187.85 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: