பிறை தென்பட்டதால் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை

சென்னை: தமிழகத்தில் பல பகுதிகளில் பிறை தென்பட்டதால் வரும் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் தலைமை காஜி தாவூத் கைஸர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று பிறை தென்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரும் 6ம் தேதி வெள்ளிக்கிழமை அரபா நோன்பு எனவும், வரும் 7ம் தேதி சனிக்கிழமை ஹஜ் பெருநாள் (பக்ரீத் பண்டிகை) என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

The post பிறை தென்பட்டதால் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை appeared first on Dinakaran.

Related Stories: