இரண்டு ஆண்டுகள் கழித்து பாமக அதிமுகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அப்போது நாங்கள் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் உயிர் கொடுத்தோம். ஜெயலலிதா முதலமைச்சராக வரவே முடியாது என்ற சூழல் இருந்த நேரத்தில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம். அதனால்தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார். 2019ல் நாங்கள் இல்லை என்றால் எடப்பாடி முதலமைச்சராக தொடர்ந்து இருக்க முடியாது. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 9 தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். அதில் ஐந்து தொகுதிகளில் எங்களால் வெற்றி பெற்றீர்கள். நாங்கள் இல்லை என்றால் அன்று உங்களது ஆட்சி கவிழ்ந்திருக்கும். அன்று உங்களுக்கும், உங்களது ஆட்சிக்கும் உயிர் கொடுத்தது நாங்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.
The post எடப்பாடி ஆட்சி கவிழாமல் தடுத்தோம்; ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் நாங்கள்தான் உயிர் கொடுத்தோம்: கொளத்தூரில் அன்புமணி பேச்சு appeared first on Dinakaran.