அதன்படி ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 5 இடங்கள் தேர்வு செய்யப்டட்டது. அதனை ஆய்வு செய்யும் பணியை, இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்தது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க அரசு தேர்வு செய்தது. அதாவது கிழக்கு ஓசூர் மற்றும் வடக்கு சூளகிரி ஆகிய இரு இடங்களையும் தமிழ்நாடு அரசு தேர்வு செய்தது. இந்நிலையில், ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, அரசு தேர்வு செய்த இரண்டு இடங்களிலும் விமான நிலையம் அமைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post கிழக்கு ஓசூர், வடக்கு சூளகிரி என 2 இடங்கள் தேர்வு ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க எந்த சிக்கலும் இல்லை: விமான போக்குவரத்து ஆணையம் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.
