அத்தகைய தியாக சீலருக்கு, நவம்பர் 2ம் தேதி நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில், கவுரவ டாக்டர் பட்டம் வழங்க காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு முடிவெடுத்துள்ளது. நவம்பர் 3ம்தேதி, சங்கராய்யாவை நேரில் சந்தித்து டாக்டர் பட்டம் வழங்குவது என்றும் பல்கலைக் கழகம் முடிவு செய்தது. தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி இதற்கு எதிராக நடந்துகொள்வது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு ஆகும். இதன் பின்னரும் ஆர்.என்.ரவி தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மாநில அரசோடு நிழல் யுத்தம் செய்யும் போக்கினை தொடர்வது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் விவகாரம் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு துரை வைகோ கண்டனம் appeared first on Dinakaran.