இந்நிலையில், வெங்கடாபுரம் ஊராட்சியில் நேற்று ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை மற்றும் ரூ.9.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பங்கேற்று, ரூ.60 லட்சம் மதிப்பிலான சாலை மற்றும் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர் சந்தானம், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, துணை தலைவர் செந்தில்குமார், தர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post குடிநீர் நிலையம், சிமென்ட் சாலை எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.