மதுரை : கிரிஸ்டல் பந்தை தடை செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு ஏன் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏப்.2-க்குள் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என்றால் மத்திய அரசுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீரில் போட்டால் பல மடங்கு உருவத்தில் பெரிதாகும் கிரிஸ்டல் பந்து தமிழகம் முழுவதும் கடைகளில் விற்கப்படுகிறது.
The post கிரிஸ்டல் பந்தை தடை செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.