இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் சிம்பு தரப்பில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ரசீது தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து உத்தரவிட்டார். மேலும், கொரோனா குமார் படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற வேல்ஸ் நிறுவன கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வெளிநாடு செல்வதற்கோ அல்லது வேறு படங்களிலோ நடிப்பதற்கு தடை விதித்தால் மற்ற நிறுவனங்களுடன் தொழில் ரீதியாக அவர் மேற்கொண்ட பணிகளை பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
The post ‘கொரோனா குமார்’ படத்தை முடிக்காமல் வேறு படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க முடியாது: தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.