இதற்கு பிரதமர் மோடிதான் காரணம். முந்தைய பாஜக அரசு, மாநிலத்திற்கான உரிய தொகையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று குற்றம்சாட்டினார். புதியதாக முதல்வராக பதவியேற்ற சித்தராமையாவுக்கும், துணை முதல்வராக பதவியேற்ற சிவக்குமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை நனவாக்கும் வகையில், உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
The post உங்களின் ஒத்துழைப்பு தேவை: மோடிக்கு சித்தராமையா பதில் appeared first on Dinakaran.