பெரும்பேர் கண்டிகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமையில் எல்லையம்மன் கோயில் வளாகத்தின் நடைபெற்றது. இதில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் பயனாளிகள் தேர்வு குறித்தும், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானபிரகாசம், அன்பரசு,வேளாண்மை பொறியியல் துறை அலுவலர் அசோகன், வேளாண்மை துறை ஒருங்கிணைப்பாளர் கவிதா, உள்ளிட்ட அதிகாரிகள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் ஒன்றியம் அண்டவாக்கம் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவரதன் தலைமையில் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் அரசு திட்டங்களை செயல்படுத்த குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் நாகராஜன், ஊராட்சி செயலர் முருகன், கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் ஒன்றியம் வையாவூர் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழி கல்விக் கொண்டு வந்த பள்ளிக் கல்வித் துறைக்கு நன்றி தெரிவித்தும், காலை சிற்றுண்டி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா குமரன்,வார்டு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பெரும்பேர் கண்டிகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: