முதல்வராக பதவியேற்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். அதன்படி தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. மாநிலத்தின் 13வது முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு, ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான புதிய அரசு, வரும் 8ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளது. ஜார்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் கட்சிக்கு 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்எல்ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ என மொத்தம் 47 பேர் உள்ளனர். மொத்தமுள்ள 81 இடங்களுக்கு ெபரும்பான்மை பலத்திற்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரனின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
The post முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை appeared first on Dinakaran.