இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கலைவாணி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், விரிவான விசாரணை நடத்தி, வருகிற 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், சேலம் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, நேற்று எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏ (I) (II) (III)ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, எடப்பாடி சொத்து விவரங்கள் குறித்து, விரைவில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு; எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: விரைவில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு appeared first on Dinakaran.