அவரும் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இது பற்றி புகார் கொடுக்க எஸ்பியாக இருந்த சுஜித் தாசை அணுகினேன். சில நாட்கள் கழித்து என்னை போனில் தொடர்பு கொண்ட எஸ்பி சுஜித் தாஸ், தான் கூறும் ஒரு இடத்தில் காத்திருக்குமாறு கூறினார்.அங்கு வந்த அவர் ஒரு சொகுசு காரில் என்னை அப்பகுதியிலுள்ள ஒரு பங்களாவுக்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து என்னை எஸ்பி சுஜித் தாஸ் பலாத்காரம் செய்தார். மேலும் அவருடன் வந்த ஒரு சுங்க இலாகா அதிகாரியுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் அதற்கு மறுத்து விட்டேன். அதன்பின் மீண்டும் ஒருமுறை எஸ்பி சுஜித் தாஸ் என்னை பலாத்காரம் செய்தார். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் இந்தப் புகாரை எஸ்பி, டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மறுத்துள்ளனர்.
The post இளம்பெண்ணை எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் பலாத்காரம் செய்ததாக புகார்: மலப்புரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.