முதியவர் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்ற மறுப்பு: பைக்கில் கொண்டு சென்ற துயரம்


துமகூரு: கர்நாடகா மாநிலம் துமகூரு, பாவகடா தலவாய்ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹொன்னூரப்பா (80). வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் சில நாட்களாக படுத்த, படுக்கையாக இருந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனே அவரை மகன்கள் மற்றும் உறவினர்கள், ஆம்புலன்சில் ஒய்.என்.ஹொஸ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மருத்துவமனை முன் நின்ற ஆம்புலன்சில், ஹொன்னூரப்பா உடலை எடுத்து செல்ல, அவரது மகன்கள் முடிவு செய்தனர். ஆனால், ‘இறந்தவர் உடலை ஏற்ற மாட்டோம்’ என்று, ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ ஊழியர் கூறினர். எவ்வளவோ பேசியும் பலன் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து வேறு வழியின்றி உடலை பைக்கில் வைத்து, அவரது இரு மகன்களும் கொண்டு சென்றனர்.

ஒரு மகன் பைக் ஓட்டினார். ஹொன்னூரப்பா உடலை நடுவில் அமர வைத்து, இன்னொரு மகன் பிடித்திருந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post முதியவர் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்ற மறுப்பு: பைக்கில் கொண்டு சென்ற துயரம் appeared first on Dinakaran.

Related Stories: