மேலும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தென்னை மரங்களை வெட்டி அழித்துவிட்டு முருங்கை, காலிபிளவர், அவரை போன்ற விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். மேலும் ஒரு சில விவசாயிகள் தென்னை மரங்களை அழித்து விளை நிலத்தை பிளாட்டுகளாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்து மயிலாடும்பாறை விவசாயிகள் கூறுகையில், ‘தென்னை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல் என அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், அறுவடை காலங்களில் உரிய கிடைக்காததால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், தென்னை மரங்களை அழித்து மாற்று விவசாயத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தென்னை விவசாயிகளின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post மயிலாடும்பாறை பகுதியில் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள் appeared first on Dinakaran.