குழந்தை இல்லாததை காரணம் காட்டி வேறொருவரை மனைவி திருமணம் செய்ததால் வாலிபர் தற்கொலை

சோழிங்கநல்லூர்: குழந்தை இல்லாததை காரணம் காட்டி வேறொருவரை மனைவி திருமணம் செய்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அயனாவரம் என்எம்கே தெருவை சேர்ந்தவர் சீயோன் குமார் (26). இவர், சென்னை மாநகராட்சியில் தற்காலிகமாக குப்பை வண்டி ஓட்டும் ஊழியராக வேலை செய்து வந்தார். 5 வருடங்களுக்கு முன்பு சுமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை இல்லாத காரணத்தால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக, சுமதி கடந்த 6 மாதத்திற்கு முன்பு சீயோன் குமாரை பிரிந்து சென்றார். பின்னர், வேறு ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டார். சீயோன் குமார் தனது பெற்றோர் மற்றும் அக்கா பிரேமாவதி ஆகியோருடன் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்ற நாள் முதல் மன உளைச்சலில் இருந்த சீயோன் குமார், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் கழித்து சீயோன் குமாரின் அக்கா குழந்தைகள் வீட்டிற்கு வந்தபோது, சீயோன் குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீயோன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குழந்தை இல்லாததை காரணம் காட்டி வேறொருவரை மனைவி திருமணம் செய்ததால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: