சென்னை அடுத்த புழலில் அமைச்சர் பெயரை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.7.40 லட்சம் மோசடி..!!

சென்னை: சென்னை அடுத்த புழலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெயரை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.7.40 லட்சம் மோசடி அரங்கேறியுள்ளது. மோசடியில் ஈடுபட்ட லயோலா ரோஸாரியோ சர்ச்சில்(31) மற்றும் மகேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அந்தோணி ராஜ் என்பவர் தலைமறைவானார். காஞ்சிபுரம் பிரேம்குமாருக்கு விஏஓ வேலையும், அவரது சகோதரிக்கு மருத்துவமனை மேற்பார்வையாளர் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடைபெற்றது. பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரேம்குமார் புகார் அளித்தார்.

The post சென்னை அடுத்த புழலில் அமைச்சர் பெயரை கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.7.40 லட்சம் மோசடி..!! appeared first on Dinakaran.

Related Stories: