இதைத்தொடர்ந்து மாணவியிடம் புகாரை வாபஸ் பெறுமாறு பேராசிரியர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பேரில் பாளை போலீஸ் நிலையத்தில் பேராசிரியர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை மாணவியின் பெற்றோர் வாபஸ் பெற்றனர். இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பூதாகரமாக பரவியதை தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை. போலீசார் வழக்கு பதிந்து தூத்துக்குடி சிப்காட்டை சேர்ந்த பேராசிரியர் செபாஸ்டினை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு பேராசிரியர் பால்ராஜை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே கல்லூரி நிர்வாகம், இரு பேராசிரியர்களையும் நிரந்தர பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து உத்தரவிட்டு உள்ளது.
The post மது குடிக்க வர்றீயா? மாணவியை அழைத்த பேராசிரியர் கைது: மற்றொருவர் தலைமறைவு appeared first on Dinakaran.