சென்னையில் பிப். 1ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு

சென்னை: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கத்தில் பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். பாமக தலைவர் அன்புமணி தலைமையேற்பார். கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், அனைத்து நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.

The post சென்னையில் பிப். 1ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு appeared first on Dinakaran.

Related Stories: