சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் சிங்கப்பெருமாள்கோவில் வரை இயக்கப்படும். சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணி, 10.56, 11.40, 12.40 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் செங்கல்பட்டுக்கு பதில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து கடற்கரைக்கு ரயில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!! appeared first on Dinakaran.