அப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலான காற்று வீசியதால் காற்றின் வேகத்துக்கு ஏற்ப தீ வேகமாக பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மலைக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு சென்ற 3,000 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆடி அமாவாசை அன்று அதிகளவில் பக்தர்கள் வந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சதுரகிரி மலையில் பயங்கர காட்டுத்தீ: 3,000 பக்தர்கள் கதி என்ன? appeared first on Dinakaran.