2019 டிசம்பர் 24ல் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ரூ.8,754.23 கோடியில் நடத்துவதற்கும், ரூ.3,941.35 கோடி செலவில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது. புதிய அட்டவணையை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. ஒட்டுமொத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆர் பணிகளுக்கு அரசுக்கு ரூ.12,000 கோடிக்கு மேல் செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 3 ஆண்டு தாமதமாகியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: இந்த ஆண்டும் இல்லை appeared first on Dinakaran.