பில்லி சூன்யம் வைத்ததாக சந்தேகம் 2 பழங்குடியின பெண்கள் படுகொலை

பிர்பூம்: மேற்கு வங்க மாநிலம்,பிர்பூம் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் லோட்கி கிஸ்கு மற்றும் டோலி சோரன். பழங்குடியினரான இந்த பெண்களை அவர்கள் வீட்டின் அருகே உள்ளவர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இரண்டு பேரின் உடல்களும் ஹரிசாரா என்ற கிராமத்தின் அருகே உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்டன. டோலி சோரனின் குடும்பத்தினர் கூறுகையில்,‘‘இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் டோலி சோரனை வெளியே இழுத்து சென்றனர். அவரை கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கினர்’’ என்றனர். மயூரேஸ்வர் போலீஸ் நிலைய அதிகாரி கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் பில்லி சூன்யம் வைத்த சந்தேகத்தில் 2 பெண்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வேறு காரணங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது சம்மந்தமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

The post பில்லி சூன்யம் வைத்ததாக சந்தேகம் 2 பழங்குடியின பெண்கள் படுகொலை appeared first on Dinakaran.

Related Stories: