இந்த சம்பவம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பொதுமக்களை கொன்று வரும் ஓநாய்களை கண்டதும் சுட முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் ஆள்கொல்லி ஓநாய்களை பிடிக்க ஆபரேஷன் பேடியா என்ற தேடுதல் வேட்டை ஏற்படுத்தப்பட்டு, ட்ரோன்கள் மூலம் ஓநாய்களின் நடமாட்டம் கண்டறிந்து அவற்றை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆபரேஷன் பேடியா தேடுதல் வேட்டையில் ஏற்கனவே 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் ஓரு ஓநாய் நேற்று பிடிபட்டது.
The post இதுவரை 9 பேர் பலி உ.பி.யில் பிடிபட்ட 5வது ஓநாய் appeared first on Dinakaran.