மேலும், நகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகரில் மழை நின்ற பிறகும் தண்ணீர் வடியாமல் இருந்தது. இப்பகுதியை பார்வையிட்ட நாசர் எம்எல்ஏ, மழைநீரை உடனடியாக அகற்ற விரைவுப்படுத்தினார். இதனால், என்எல்சி நிர்வாகம் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சத மின் மோட்டார் மூலம், தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. அப்போது, தண்ணீர் வடிந்த இடங்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மழையால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின்போது, நகரமன்ற தலைவர் மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, பொறியாளர் குமார், திமுக நிர்வாகிகள் நரேஷ்குமார், பவுல், ருக்மணி பவுல், துர்காபிரசாத், விநாயகம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post திருவேற்காட்டில் மழை பாதிப்பு பகுதிகளை ஆவடி எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.