இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, தலைமைச் செயலக காலனி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு குடிபோதையில் நின்றிருந்த 8 பேரை கைது செய்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (எ) மொட்ட தினேஷ் (23), அஜித்குமார் (எ) வெள்ள அஜித் (22), கோபி (48), கீர்த்திவாசன் (20), சஞ்சய் (20), மஸ்தான் (20), அருண் பாலாஜி (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ள ரவுடி மாணிக்கத்தின் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் திடீர் நகர் பகுதியில் உள்ள குப்பைமேடு பகுதியில் மது அருந்தியுள்ளனர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து 8 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.
The post பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்; ஆட்டோ, பைக்குகள் உடைப்பு: ரவுடி கும்பல் 8 பேர் கைது appeared first on Dinakaran.