இதனையடுத்து, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு சிறுமியை அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ததை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மடிப்பாக்கம் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. சிறுமி, பாத்ரூமில் குளித்தபோது கீழ்கட்டளை, செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அபிஷேக் (20) மற்றும் நிதிஷ் (19) ஆகிய இருவரும் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான அபிஷேக், நிதிஷ் ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி பலாத்காரம் 13 வயது சிறுமி 8 மாத கர்ப்பம்: போக்சோவில் 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.