மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் உதவியாளர்கள் மீது தாக்குதல்

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம கோட்டாவின் சக்தி நகர் பகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில், பிர்லாவின் உதவியாளர்களான ஜீவந்தர் ஜெயின், ராகவேந்தர் ஜெயின் ஆகியோர் அலுவலகம் அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பர் இருவரையும் சரமாரியாக தாக்கி, கீழே தள்ளி, அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறித்து சென்றனர். சிசிடிவி காட்சிகள் வாயிலாக மர்ம கும்பலை அடையாளம் கண்டு 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் உதவியாளர்கள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: