இந்நிலையில் வானதி சீனிவாசன் பேரவைக்கு வெளியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது ‘தங்கமணியுடன் பேசியது கூட்டணி தொடர்பாகவா?’ என நிருபர்கள் கேட்டனர். உடனே வானதி, ‘‘ஏங்க பேரவையில் உட்கார்ந்து கொண்டு யாராவது கூட்டணி பற்றி பேசுவார்களா. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏவிடம் கூட நிறைய பேசினேன். அதற்காக அவருடன் கூட்டணி குறித்து பேசுகிறேன் என்று அர்த்தமா. கூட்டணி பேசுவதற்கென இடம் இருக்கிறது, முறை இருக்கிறது, அதற்கென குழு இருக்கிறது’’ என்றார். எனினும் விடாமல் நிருபர்கள் அப்போ என்ன தான் பேசினீர்கள் என கேட்டதற்கு, ‘‘டீயில் ரொம்ப ஜாஸ்தியா சர்க்கரை இருந்ததுனு பேசினோம்ங்க, நன்றிங்க’’ என சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.
The post பேரவையில் மாஜி மந்திரியுடன் வானதி பேசியது என்ன? appeared first on Dinakaran.