இது சில வீரர்களின் உடல்தகுதியை சோதிப்பதற்கான போட்டி அல்ல. உடல்தகுதி சோதனை பெங்களூருவில் நடந்து முடிந்துவிட்டது. இது 6 ஆசிய அணிகள் இடையிலான தொடர். எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய போட்டி. ஒரு அணியாக என்ன சாதிக்கப்போகிறோம் என்பதை பார்க்க வேண்டும். எங்களுடைய ஆறு பந்துவீச்சாளர்களும் சிறந்த பந்துவீச்சாளர்கள். பும்ரா அயர்லாந்தில் சிறப்பாக இருந்தார். தற்போதைய பயிற்சி முகாமிலும் சிறப்பாக இருந்தார். எங்களது பிரதான மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இது எங்களுக்கு மிக மிக நல்ல அறிகுறி. போட்டி குறித்து மக்கள் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் எதிரணிக்கு எதிராக எப்படி சிறப்பாக செயல்படுவது என்று மட்டும்தான் பார்க்க முடியும்.
எங்களுக்கு உதவப் போவது எதுவென்றால் நாங்கள் களத்தில் செய்கின்ற சரியான விஷயங்கள்தான். அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது தான் எனது தலையாய பொறுப்பு. உலகக் கோப்பை தொடருக்கு முன்பு சில விஷயங்களை நாங்கள் சரி செய்ய உள்ளோம். அந்தப் பணியை ஆசிய கோப்பை தொடரில் நிச்சயம் செய்வோம். பாகிஸ்தான் சமீப காலங்களில் டி.20 மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் நன்றாக விளையாடியது. நம்பர் 1 ஆக இருக்க அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர். அது நாளை (இன்று) எங்களுக்கு ஒரு நல்ல சவாலாக இருக்கும், என்றார்.
The post நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டியது எனது தலையாய பொறுப்பு: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.