அப்போது சோனியாவின் உறவினர்கள் ஹூனா மேரியை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹூனா மேரி அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெகதீஷ் (38), அவரது மனைவி அமுலு (31) மற்றும் கல்பனா (48) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post காவல் நிலையத்தில் திருநங்கையை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.