இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே தீருவோம் என்று உறுதியாக கூறினார். அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து இழிவுபடுத்தியுள்ளார். அவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்தட்டும். நான் குரல் கொடுத்து கொண்டுதான் இருப்பேன் என்றார்.
இந்நிலையில், இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
நேற்று நாடாளுமன்றத்தில்
“தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?” என்று ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசினார்.
அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டார்.
நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில்
பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்கள். என்று அவர் பதிவிட்டுள்ளார்.
The post அனுராக் தாகூர் சர்ச்சை பேச்சு.. நாட்டின் மிக உயர்ந்த அவையில் பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு வெளிப்படுகிறது: சு.வெங்கடேசன் எம்.பி. தாக்கு!! appeared first on Dinakaran.