இதுதொடர்பாக நேற்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், `விசாகப்பட்டினம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைப்பதை ஆந்திர மக்கள் விரும்பவில்லை, எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உருக்காலையை மத்திய அரசு மீண்டும் திறம்பட நிர்வகித்து லாப பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் குமாரசாமி, அடுத்த 2 மாதங்களில் இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய உருக்கு மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் பூபதிராஜு சீனிவாசவர்மா மற்றும் ஆந்திர எம்பிக்கள் உடனிருந்தனர்.
The post ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஒன்றிய அமைச்சரிடம் எம்பிக்கள் மனு appeared first on Dinakaran.