இத்தகைய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனங்களை ஒய்வுபெற்ற அரசு அதிகாரிகள் நடத்துவதாக குறிப்பிட்ட அவர், பணியிடத்திற்கு சென்று ஆய்வு செய்யாமல் வீடுகளில் இருந்தபடி, கூகுள் பார்த்தே அவர்கள் அறிக்கையை தயாரிப்பதாக கூறினார். இந்த வார்த்தையை கூற கூடாது என்றாலும் அவர்களை குற்றவாளிகள் என்று தான் கூற வேண்டும் என்றும் நிதின் கூறினார். தொழில்நுட்ப ரீதியான விஷயங்களை அமைச்சர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்ற அவர், திட்ட அறிக்கையின் அடிப்படையில் தான் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். அரசை நடத்துபவர்களுக்கு அதிகாரிகள் தான் வழிகாட்டிகள் என்ற அவர், அவர்கள் தயாரிக்கும் கோப்புகளில் என்ன எழுதி இருந்தாலும் உயர் அதிகாரி கையெழுத்திடுவது போலவே அமைச்சர்களும் கையெழுத்திட்டு தான் ராமராஜ்ஜியம் நடைபெறுகிறது என்றார்.
The post தரமற்ற உள்கட்டமைப்பு பணிகளால் விபத்துகள் நிகழ்வதாக நிதின் கட்கரி பேச்சு : அமைச்சர்கள் கையெழுத்து மட்டும் போடுவதே ராமராஜ்யம் என கேலி!! appeared first on Dinakaran.